Truyen2U.Net quay lại rồi đây! Các bạn truy cập Truyen2U.Com. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 4

பாகம் 3 உங்களுக்கு புடிச்சிருக்கு என்று நம்புகிறேன். அடுத்த பாகதுக்கு போலாமா.

பஸ் ஸ்டண்ட் இல் ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டும் இரவு மணி ஆகி விட்டால் எந்த வண்டியும் கிடைக்காது. இது நிலாவிற்கு நன்றாகவே தெரியும், அவள் அப்பா அவளை கேட்க்கும் கேள்விகளுக்கு அவள் தூக்கில் தொங்கி விடலாம் என்று தோன்றும் ரொம்ப மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் இது அவளுக்கு நன்றாக தெரியும். மணி 9.15 தொட்டிருந்தது. கவி அங்கிருந்து செல்ல வில்லை. திரும்ப அவளை அழைத்தான். நிலா தயவு செய்து வாயேன் உன்னை கொண்டு போய் விடுகிறேன் என்றான். நிலாக்கும் வேற வழி இல்ல சரின்னு சொல்லிட்டு அவன் கூட வண்டியில் கிளம்பினாள் ஆனால் வழியில் எதுவும் பேச வில்லை. கவிக்கு மிகவும் வலித்தது. தன் இதயத்தை யாரோ கிழிதால் போல இருந்தது அந்த வலி. அவன் கண்களும் கலங்கி இருந்தது. நிலா அழைத்தான் பதில் இல்லை. தன்னுடைய நல்ல நண்பனாக நினைத்தவன் இப்போது இப்படி ஆனது அவளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்திருந்தது. திரும்ப அழைத்தான் நிலா இங்க பாரு இப்போ எதுவும் ஆகி விட வில்லை, எனக்கு உன்னை பிடித்து இருந்தது, அதனால சொன்னேன், நாம எப்பவும் நல்ல நண்பர்களாவே இருப்போம், இப்போ என்ன ஆகிடுச்சுன்னு இப்போ நீ மூஞ்சிய தூக்கி வெச்சுருக்க, இப்போ என்ன நான் தப்பு பண்ணிட்டேன், இனிமே உன்கிட்ட இப்படி லாம் நடந்துக்க மாட்டேன் சரியா கேட்டான், அவன் சொல்வது சரிதான் என்று நிலாவிற்கு தோன்றியது, சரி என்று தலையை மட்டும் ஆட்டினாள், அனால் ஒன்றும் பேச வில்லை, கவிக்கு கோவம் வந்து விட்டது, கொஞ்சம் கத்தி விட்டான், அப்போது தான் நிலாவிற்கு புரிந்தது அவள் வீட்டின் அருகில் வந்து விட்டோம் என்று, இந்த நேரத்தில் ஒரு ஆணுடன் வந்து இறங்கினால் அவ்வளவுதான் அவள் அப்பா இவள் செய்த தவறிற்கு அவள் அம்மாவும் வேறு தண்டனை அனுபவிக்க வேண்டும்.

கவி எல்லாத்தையும் நாளைக்கு அலுவலகத்தில் பேசிக்கலாம், இப்போ என்ன இங்கயே இறக்கி விட்டுட்டு நீ சீக்கரம் கெளம்பு என்றாள், ஆனால் அவள் அம்மா தூரத்தில் அவளை தேடி வந்ததையோ இருவரும் கவனிக்க வில்லை, கவி எதற்கும் ஒத்துக்கொள்ள வில்லை, வீட்டிலே விட்டுட்டுட்டு போறேண்டீ என்றான், அதற்குள் அவள் அம்மா பார்த்து விட்டாள், என்னடீ நீ இந்த நேரத்தில ஆத்துக்கு வர்லன்னுட்டு அப்பா காத்திண்டுஇருக்கா நீ என்னடான்னா இவனோட இங்க நின்னு பேசிண்டிருக்கன்னு கத்த ஆரம்பிச்சுட்டா, கவி தான் பேச ஆரம்பித்தான், நான் நிலா அலுவலகத்தில் தான் வேலை பார்க்கிறேன், இன்னைக்கு கொஞ்சம் வேல அதிகம் லேட்டா ஆ ஆயிடுச்சு, அதான் நானே கொண்டு வந்து விடலாம்னு வந்தேன்னு சொன்னான், அம்மா அதற்க்கு, சரிப்பா நீ கிளம்பு நான் பாத்துக்கறேன்னு சொன்னாள், அவனும் கிளம்பிவிட்டான், வீட்டிற்க்கு வந்தது தான் தாமதம், அம்மா அப்பா இருவரும் என்னை ஒரு வழி ஆக்கி விட்டிருந்தனர், சாப்பிடவும் சொல்ல வில்லை, எதை பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை போலவும், ஏதோ இரவு லேட்டா ஆகா வந்தது தான் தவறு என்றும் இருந்தது அவர்களது பேச்சு, சரி என்று படுத்து விட்டேன் உடையை மாற்றிக்கொண்டு, ஆனால் கவியின் முகம் வந்து போனது, நான் அவனை காதலிக்க வில்லை, ஆனால் அவன் எனக்கு முதல் ஆண் நண்பன், நல்லவன், குழந்தை தனமான அவனது சேட்டைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும், நாளைக்கு லதா குடைய ஆரம்பித்து விடுவாள், என்ன சொல்வது நானும் கவியும் ஒரே போல பேச வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Com